கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 18. Dezember 2010

ஜுஜுப்ஸ்

சிறுவர் முதல் பெரியவர் வரை இலகுவாக
உண்ண கூடியதும் சுவையானதுமான ஒர்
இனிப்பே ஜுஜுப்ஸ் ஆகும். அத்துடன்
ஜுஜுப்ஸ் இலங்கை மக்கள் மிக மிக
விரும்பி உண்ணும் ஒர் இனிப்பு ஆகும் 

தேவையான பொருட்கள் 
சீனி - 250 கிராம்
ஜெலற்றீன் - 20 கிராம் (3மேசைகரண்டி மட்டமாக)
சிட்ரிக் அமிலம் - அரை தேக்கரண்டி
(நன்கு)கொதித்த தண்ணீர் - தேவையானளவு
தண்ணீர் - 10 மேசைக்கரண்டி (அரை டம்ளர்)
கலரிங் (விரும்பியது) - 1 தேக்கரண்டி
சீனி - 4 மேசைக்கரண்டி
மாஜரீன் (தட்டுக்கு பூச) - 1 தேக்கரண்டி


செயல்முறை   
ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு
அதனுடன் 10 மேசைக்கரண்டி(அரை
டம்ளர்) நன்கு கொதித்த தண்ணீர்
விடவும்.

அதன் பின்பு அதை நன்றாக கொதித்த
தண்ணீர் உள்ள இன்னொரு பாத்திரத்தில்
அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன்
முற்றாக கரையும் வரை நன்றாக கரைத்து
அப்படியே கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள்
 வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில்
சீனியை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு
காய்ச்சவும்.

பாகு காய்ச்சும்போது சீனி முழுவதும் கரைந்து
வெளுப்பான நுரைபதம் தோன்றி மறைந்து பாகு
 கொதிக்கும் பதத்தை அடைந்ததும் ஒரு குளிர்நீர்
கொண்ட பாத்திரத்தில்சிறிதளவுஇப்பாகை விட்டு
 பார்க்கும் போது நீரில் கரையாமல் தண்ணீரில்
பாகு தெரியும்.

பதத்தை அடைந்ததும் (தொட்டு பார்க்கும் போது
கையில் பசை போல ஒட்டும்) தாட்சியை உடனே
அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின்பு சூடாக இருக்கும் போது அதனுடன் கலத்து
வைத்துள்ள ஜெலற்றீன், கலரிங், சிட்ரிக் அமிலம்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்
பின்பு ஒரு தட்டு முழுவதும் மாஜரீன் பூசவும்.

மாஜரீன் பூசிய தட்டில் செய்த கலவையை ஊற்றி
12 மணித்தியாலம் வைத்த பின்பு 1/2"தர 1/2" அளவான
துண்டுகளாக ஒரு கூரான கத்தியால் கீறிக் கொண்டு
ஒரு மாஜரீன் பூசிய கரண்டியால் ஒவ்வொரு துண்டு
களையும் தூக்கி எடுத்து சீனியில் பிரட்டிய பின்
பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு
அதனுடன் 10 மேசைக்கரண்டி (அரை
டம்ளர்)நன்கு கொதித்த தண்ணீர்
விட்டு நன்றாக கொதித்த தண்ணீர்
உள்ள இன்னொரு பாத்திரத்தில்
அமிழ்த்தி வைத்து கொண்டு
ஜெலெற்றீன் முற்றாக கரையும்
வரை நன்றாக கரைத்து அப்படியே
கொதிநீர் உள்ள பாத்திரத்தினுள்
வைக்கவும்.
தொட்டு பார்க்கும் போது கையில்
பசை போல ஒட்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.