கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 21. April 2011

திடீர் தோசை


தோசை சுவையானதும் கார்போஹைட்ரேட்,
கொழுப்பு, புரதம், கரோட்டீன் சத்து, நார்சத்து,
நீர்சத்து பொட்டாசியம் பொஸ்பரஸ் கல்சியம்
விற்றமின், மினரல் போன்ற பல சத்துக்கள்
உடையதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை விரும்பி உண்ணகூடியதும் ஆகும்.
ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்



தேவையானபொருட்கள்
கோதுமை மா(மைதா மா) - 2 சுண்டு
ஆட்டா மா(கோதுமை மா) - ஒரு சுண்டு
துருவிய கரட் -ஒரு கப்
துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
துருவிய தக்காளிப்பழம் - ஒரு கப்
முட்டை - ஒன்று (விரும்பினால்)
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 பின்ச்
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்- 1
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 2
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அப்ப சோடா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சிறிய துண்டுகளாக நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையானளவு

செய்முறை
கிரைண்டரில்(மிக்ஸியில்) கோதுமைமா(மைதாமா),
 ஆட்டாமா(கோதுமைமா), துருவிய கரட், துருவிய
வெள்ளரிக்காய், துருவிய தக்காளிப்பழம், முட்டை,
பால், பட்டர், மஞ்சள்தூள், உப்பு, ஆப்பசோடா,
தண்ணீர் ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல்
 நன்றாக கலக்கவும்.(தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(10 -15) நிமிடங்கள்
புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு நல்லெண்ணெயை
ஊற்றி வைக்கவும்.

உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
 உருளைக்கிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணெயில்படும்படி).

செத்தல் மிளகாயின்(காய்ந்தமிளகாயின்)காம்பினை
அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில்
வைக்கவும்.

பின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து
 அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணெயில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
 பெருஞ்சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
நன்றாக கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்தியகிழங்கினால்(கிழங்கினை எண்ணெயில்
நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து
அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல்(துவையல்), சாம்பார், சட்னி,
பிரட்டல்(கிழங்கு கத்தரிக்காய்,பீன்ஸ்) ஆகிய
வற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா
மா) சேர்க்காமல் செய்யவும்.
தக்காளிப்பழம்அலர்ஜி உள்ளவர்கள்
அதனை சேர்க்காமல் செய்யவும்,
இருதய நோயாளர்வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும் .


 மாற்றுமுறை 
பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம்.
தாளித்து போடாமலும்செய்யலாம்,
முட்டைபோடாமலும் செய்யலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.