கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 21. April 2011

மசாலா பான்கேக்


மசாலா பான் கேக் சுவையானதும், கார்போ
ஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கரோட்டீன்,
 நார்சத்து, நீர்சத்து, பொட்டாஷியம், பொஸ்
பரஸ், கல்சியம், விற்றமின், மினரல் போன்ற
பலசத்துக்கள் உடையதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும்
ஆகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்.


தேவையான பொருட்கள் 
கோதுமை மா(மைதா மா) - 2 சுண்டு
ஆட்டா மா(கோதுமை மா) - ஒரு சுண்டு
துருவிய கரட் - ஒரு கப்
துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
துருவிய தக்காளிப்பழம் - ௧கப்
முட்டை - ஒன்று (விரும்பினால்)
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அ ப்பசோடா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளிசாஸ் - தேவையான அளவு


செய்முறை 
கிரைண்டரில் (மிக்ஸியில்) கோதுமைமா
 (மைதாமா), ஆட்டா மாவு (கோதுமைமா)
துருவிய கரட், துருவிய வெள்ளரிக்காய்,
துருவிய தக்காளிப்பழம், முட்டை, பால்,
பட்டர், உப்பு, அப்பசோடா, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல்
நன்றாக கலக்கவும் (தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனைஎடுத்து
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(2-4)
மணித்தியாலங்கள் புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு எண்ணெயை
ஊற்றி வைக்கவும்.

உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக
வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில்
ஒரு பாதி உருளைக்கிழங்கை குத்தி
(முள்ளுஉள்ள பகுதியில்மாட்டி)வைக்கவும்.

இதனை எண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணெயில்படும்படி).

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளு
கரண்டியில் குத்திய கிழங்கினால்(கிழங்கினை
எண்ணெயில் நன்றாக புரட்டி)தோசைக்கல்லில்
 தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை
எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக
தேய்த்து(ஊற்றிய மாவை)பான்கேக்கை
வேகவிடவும்.

பான்கேக்கின் ஒருபக்கம் வெந்ததும் அதை
திருப்பி போட்டு வேகவிடவும்.

பான்கேக் நன்றாக வெந்தபின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய பான்கேக்குகளையும்
சுட்டு முதலில் சுட்ட பான்கேக் போட்ட
பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் பான்கேக்குகளைவைத்து
அதன் மேல் தக்காளிசாஸ் அல்லது வேறு
ஏதாவது சாஸ்ஸினை பூசி பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா
மா)சேர்க்காமல் செய்யவும்,இருதய
நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்,
தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் அதனை
சேர்க்காமல் செய்யவும்


மாற்றுமுறை 
பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம்,
தக்காளி சாஸ்க்கு பதிலாக விரும்பிய
சோஸ் வகைகளை பாவிக்கலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.