கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 14. April 2011

பூசணி அல்வா

பூசணி அல்வாவில் கார்போஹைட்ரேட்,
சீனி (சர்க்கரை) நார்சத்துக்கள், கொழுப்பு,
புரதம், நீர், விற்றமின் A,B1,B2,B3,B5,B6;B9,C,
E,K, கல்சியம், இரும்பு, மக்னீஸியம்,
பொஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்
போன்ற பல சத்துக்கள், சுவை சேர்ந்து
காணப்படுகிறது இதனை செய்து சாப்பிட்டு
இதன் சுவையை அறியவும்.


தேவையான பொருட்கள்

துருவி பிழிந்தபூசணிக்காய் - 500 கிராம்
சீனி(சர்க்கரை) - 500 கிராம்
பட்டரில் பொரித்த ப்ளம்ஸ் - 50 கிராம்
கயூ(முந்திரிப்பருப்பு) - 50 கிராம்
சிட்ரிக் அமிலம் - 2 சிட்டிகை
வாழைப்பழ எசன்ஸ் - 2 சிட்டிகை
மஞ்சள் நிறம் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி (மட்டமாக)


செய்முறை 
கொஞ்சம் பட்டரை எடுத்து அதனை ஒரு
தட்டின் எல்லா பாகங்களுக்கும் (தட்டின்
உள்பாகம் முழுவதும்)பூசி வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
 சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி பட்டரை
போட்டு சூடாக்கிய பின்பு அதில் கயூவை
(முந்திரிப்பருப்பை) போட்டு பொரிக்கவும்.

பொரித்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அடுப்பில் மற்றைய தாட்சியை
 வைத்து அதில் தோல் நீக்கி துருவி நன்றாக
பிழிந்த பூசணிக்காயை போடவும்.

அதனுடன் சீனியை (சர்க்கரை)சேர்த்து மிக
மிக நன்றாக கலக்கவும்.

சீனி(சர்க்கரை)நன்றாக கலந்த பின்பு
அதனுடன் ஒரு மேசைக்கரண்டி பட்டரை
 சேர்த்து காய்ச்சவும்.

இக்கலவையிலிருந்து நீர்தன்மை வற்றி
திரள தொடங்கும் போது இதனுடன்
மஞ்சள்நிறம், வாழைப்பழ எசன்ஸ்(பனானா
எசன்ஸ்), பட்டரில் பொரித்த ப்ளம்ஸ், கயூ
(முந்திரிப்பருப்பு), சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை
சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு கலந்த கலவை உள்ள பாத்திரத்தை
அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலிருந்த
கலவையை பட்டர் பூசிவைத்திருக்கும் தட்டில்
போட்டு அதனை ஒரு அங்குல தடிப்பில் நன்றாக
பரவி விடவும்.

நன்றாக பரவியதும் அதனை நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் விரும்பிய அளவுடைய
துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு சுவையான சத்தான பூசணி அல்வா
தயாராகிவிடும். இதனை ஒரு தட்டில் வைத்து
பரிமாறவும்.


எச்சரிக்கை 
 சர்க்கரை நோயாளர், பூசணிக்காய் அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


மாற்று முறை 
பட்டர்க்கு பதிலாக மாஜரின் அல்லது நெய்யை
பாவிக்கலாம்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
தோல் நீக்கி துருவி நன்றாக பிழிந்த பூசணிக்காயை
போடவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.