துபாய் பூசணிக்காய் தோல் துவையல்
சுவையானது செய்வதற்கு இலகுவானது,
கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு,
புரோட்டீன், விற்றமின் A,B1,B2,B3,B5,B9,C9,E,
மினரல், கரோட்டீன், கல்சியம், இரும்பு
மக்னீஸியம், பொஸ்பரஸ், பொட்டாசியம்,
சோடியம் ஆகிய பல சத்துகள் அடங்கியது.
சுவையானது செய்வதற்கு இலகுவானது,
கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு,
புரோட்டீன், விற்றமின் A,B1,B2,B3,B5,B9,C9,E,
மினரல், கரோட்டீன், கல்சியம், இரும்பு
மக்னீஸியம், பொஸ்பரஸ், பொட்டாசியம்,
சோடியம் ஆகிய பல சத்துகள் அடங்கியது.
தேவையான பொருட்கள்
துபாய் பூசணிக்காய் தோல் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - (6 -15)
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு )- அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - (அரை+அரை) 1
உள்ளி(பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிதளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி(விரும்பினால்)
தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு
செய்முறை
துபாய் பூசணிக்காயின் தோலை பலகையில்
வைத்து ஓரளவு பெரிய பெரிய துண்டுகளாக
வெட்டவும்.
அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து சூடாக்கவும்.
அதில் பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
வறுத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போடவும்.
பின்பு இதே போல தனித்தனியாக உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு, உள்ளி ஆகியவற்றை போட்டு
வறுத்து அதனை தனித்தனியாக பாத்திரங்களில்
போட்டு ஆறவிடவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சூடாக்கி அதில் வெந்தயத்தை போட்டவுடன்
எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
சூடாக்கி அதில் வெட்டிய கழுவிய துபாய்
பூசணிக்காய் தோலை போட்டு அதனுடன்
சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதக்கிய பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போடவும்.
பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்)வதக்கிய துபாய்
பூசணிக்காய் தோல், உள்ளி(பூண்டு), இஞ்சி,
துருவிய தேங்காய்ப்பூ, வறுத்தபச்சைமிளகாய்,
கறிவேப்பிலை, உப்பு, வெங்காயம் ஆகியவற்றை
போட்டு நன்றாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போடவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப்போட்டு
வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்ததும் அதில் வெங்காயத்தை
போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில்
பெருஞ்சீரகம்(சோம்பு) ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.
பின்பு தாளித்தவற்றை அரைத்தவற்றுடன்
கலந்து அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்
பழச்சாறு) விட்டு நன்றாக கலந்துசிறிது
நேரத்தின் பின்பு சுவையான துபாய்
பூசணிக்காய் துவையல் தயாராகி விடும்.
பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்) பாண்,
இடியப்பம், பிட்டு ஆகியவற்றில் ஏதாவது
ஒன்றுடன் துபாய் பூசணிக்காய் தோல்
துவையலை வைத்து பரிமாறவும்.
எச்சரிக்கை
பூசணிக்காய் அலர்ஜி உள்ளவர்கள்,
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.