கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 17. August 2012

தக்காளிச்சட்டினி


தேவையான பொருட்கள்
தக்காளி – நன்கு பழுத்தது 4
பச்சை மிளகாய் – 4-5 (தேவைக்கேற்ப)
உப்பு – தேவையானளவு

தாளிக்க – 
கடுகு -1 தேக்கரண்டி
உளுந்து-1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
கறிவேப்பிலை -தேவையானளவு

செய்முறை
தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம்
மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும்
(அல்லது பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் 
விட்டுஒரு விசில் வரும் வரை வேக
வைக்கவும்.அல்லது அடுப்பில் பாத்திரத்தை 
வைத்து அதில்  தக்காளிப்பழம் மூழ்கும் 
வரை நீர் விட்டு வேக வைக்கவும்)

தக்காளிப்பழங்கள் வெந்ததும் அதனை 
ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்

 தக்காளிப் பழங்கள் ஆறியதும் அதன்
தோலைஉரித்துவிட்டு மிக்ஸியில் 
போட்டு நன்றாக மசிக்கவும்

 (தக்காளிப்பழத்தை மசிப்பதிற்கு 
தண்ணீர் விட வேண்டாம்) 

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் விட்டு சுடவைக்கவும் 

எண்ணெய் கொதித்ததும் அதில் 
கடுகு, உளுந்து,கறிவேப்பிலை, 
பச்சைமிளகாய் ,பெருங்காயத்தூள் 
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். 


மசித்த தக்காளிச் சாற்றில் உப்பு, 
தாளித்தவை ஆகியவற்றையும் 
போட்டு கிளறவும். 

இப்போது சுத்தமான சுவையான 
தக்காளி சட்னி தயாராகிவிட்டது

 ஒரு தட்டில்  தோசை, இட்லி 
இடியப்பம் ஆகியவற்றில் ஒன்றை 
வைத்து அதனுடன் சுத்தமான 
சுவையான தக்காளிசட்னியை
 வைத்து பறிமாறவும் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.