கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 22. März 2013

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.