தேவையானபொருட்கள்
அவித்து ஆறிய சோள முத்துகள் - 1 கப், இட்லி மாவு - 2 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அவித்து ஆறிய
சோளமுத்தை போடவும்
பிறகு அதனுடன் இட்லி மாவை
போட்டு நன்றாக கலக்கவும்
பின்னர் அவற்றுடன் இஞ்சி-பூண்டு
(உள்ளி) விழுது, மஞ்சள் தூள், உப்பு
சேர்த்துக் கலக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் இட்லி
செய்யும் பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள்
இட்லி அவிக்கும் தட்டினைவைத்து அதன்
மேற் மூடியால் மூடி பின்பு அதனை
சூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில்
எண்ணெய் தடவும்
அதன் பின்னர் கலந்த மாவை ஒரு குழி
கரண்டியால் எடுத்து( ஒருகுழிக்கு முக்கால்
கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொருகுழியின்
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லாகுழி
களையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.
அவிந்ததும் சின்னச் சின்ன துண்டுகளாக
வெட்டி, சட்னியுடன் பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.