கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 23. März 2013

முளைக்கீரைதொக்கு



தேவையான பொருட்கள் :
உருவியமுளைக்கீரை – 2 கப்
பொடியாக நறுக்கியவெங்காயம் : 2
பொடியாக நறுக்கியதக்காளி பெரியது - 1
நறுக்கியகறிவேப்பிலை -சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பல் தட்டி கொள்ளவும்
செத்தல் மிளகாய் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையானளவு
நல்லெண்ணெய் – தேவையானளவு
தேங்காய்பூ _ 1/4 கப் ( விரும்பினாள் )

செய்முறை :
உருவியமுளைக்கீரையை நன்றாகக்
கழுவி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்

அடுப்பில் தாச்சியை வாணலியை
வைத்து சூடாக்கவும்

பின்னர் அதில் சிறிது நல்லெண்ணெய்
விட்டு சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் செத்தல்
மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு,புளி ஆகியவற்றை போட்டு ஓரளவு
பொரித்தெடுக்கவும் .

ஓரளவு பொரித்தெடுத்த பொருட்களை
அடுப்பில் இருந்து எடுத்து ஒரு தட்டில்
போட்டு ஆறவிடவும்

பொரித்தெடுத்த பொருட்கள் ஆறியவுடன்
கிரைண்டரில் போட்டு அவற்றுடன் உப்பை
போட்டு  கரகரப்பாக அரைக்கவும்.

கரகரப்பாக அரைத்த பொருட்களை எடுத்து
ஒரு தட்டில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை வைத்து
சூடாக்கவும்

பின்னர் அதில்  நல்லெணைய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு,
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி ,
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும் .

தாளித்த பின்னர் அவற்றுடன் வெங்காயம்,
உள்ளி (பூண்டு) சேர்த்து நன்றாக வதக்கவும் ,

வதக்கியபின்னர்  தக்காளி சேர்த்து வதக்கவும் ,

அதன் பின்னர் இவற்றுடன் உருவி கழுவிய
முளைக்கீரையை போட்டு வதக்கவும்

வதக்கியபின்னர்இதனுடன்  உப்பை போட்டு
வதக்கவும்

இவையாவும் வதங்கிய பின்னர் வதங்கிய
வற்றின் மேல் சிறிதளவு  கொஞ்சம் தண்ணீர்
தெளித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்

 அதன் பின்னர் இவற்றுடன்  தேங்காய் பூவை
போட்டு   கிளரிய பின்னர்  இரண்டு நிமிடம்
விட்டு  அடுப்பில் இருந்து இறக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
முளைக்கீரைதொக்கு தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) வைத்து அதில் சிறிதளவு சுத்தமான
சுவையான முளைக்கீரை தொக்கினை வைத்து
பறிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.