கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 3. März 2013

மாங்காய்சாதம்


தேவையான பொருட்கள்
பச்சை மாங்காய்-1
பச்சை மிளகாய்-2
உப்பு -தேவையானளவு
சாதம் (சோறு)-1கப்
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
பெருங்காயம் அரைத்தது- ஒரு சிட்டிகை
எண்ணெய்/நெய்-2 தேக்கரண்டி
சாதா பருப்பு-2 தேக்கரண்டி

செய்முறை 

 மாங்காயின் தோல் சிவீ  சிறு சிறு துண்டுகளாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் பச்சை மிளகாயை சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி இன்னொரு பாத்திரத்தில்
போடவும்


 பின்னர் அடுப்பில் வாணெலி (தாட்சி)யை
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்க வைக்கவும்

எண்ணெய் கொதித்ததும் அதில்கடுகு,பருப்பு
ஆகியவற்றை போட்டு அவற்றின் நிறம்
மாறும் வரையில் வதக்கவும்,

வதக்கிய பின்னர் அதனுடன் அரைத்த பெருங்
காயத்தை  போட்டு வதக்கவும்

 பின்னர் அவற்றுடன் பச்சை மிளகாயை போட்டு
வதக்கவும்,

வதக்கியதும் இதனுடன் மஞ்சள் தூள் நறுக்கிய
மாங்காய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்,

மாங்காய் நன்றாக அவிந்ததும்,அதனுடன் சாதம்
சோறுஉப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக
கிளரவும்.

 கிளரிய பின்னர் சுத்தமான சுவையான சத்தான
மாங்காய் சாதம் தயாராகிவிடும்

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி
வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
சாதத்தை வைத்து ஏதாவது சட்னியுடன்
பறிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.