கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 25. November 2013

பப்பாசிபழ அல்வா

தேவையான பொருட்கள்

பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் 
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7

செய்முறை    



முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து 
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். 

  பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது 
நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை 
போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சின 
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

பப்பாளி குழைந்து வரும், 

அதனுடன் சர்க்கரை சேர்த்து 
கிளறி விடவும்.

அல்வா சுண்டிவரும்போது 
மீதமுள்ள நெய்விட்டு 
கிளறிவரவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் 
வரும்பொது முந்திரி, பாதாம், 
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்

.பப்பாளி பழ அல்வா தயார்.

குறிப்பு:

பப்பாளி நன்றாக பழுத்ததாக 

இருக்கவேண்டும் (தோல் 
மஞ்சள் நிறமாக இருக்கும்)

பப்பாளி இயல்பாகவே இனிப்பு 
என்பதால் சர்க்கரை அளவை 
குறைத்துக்கொள்ளுங்கள்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.