கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 8. April 2014

கேள்வரகு – ராகி களி

தேவையானப் பொருட்கள் 

தண்ணீர்  - 4 டம்ளர் (225மி.லீ அளவு)
கேள்வரகு (ராகி மா) -2 டம்ளர் (225மி.லீ அளவு ). 

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 
அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு 
கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன் 
கேள்வரகு மாவை கொஞ்சம் 
கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் 
போட்டுக் கொண்டே கிளறவும்.

கட்டி கட்டாமல் கிளறுதல் 
முக்கியம்.(ரவா கிண்டுதல் 
போல.) பின்னர் மிதமான 
தீயில் வைத்து வேக விடவும்.

மா அடியில் ஒட்டாது கிளறிக்
கொண்டே இருக்கவும்.

மா கட்டி கட்டியிருந்தால் 
உடைத்துவிட்டு கிளறவும்.

மா கலவை இறுகி களி போல 
வந்ததும் இறக்கி
பரிமாறலாம்.

களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

சாப்பிடும் முறை: 

களியை சிறு உருண்டையாக
தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு
அப்படியே விழுங்க வேண்டும்

மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.
களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை
வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல்
தனி சாமர்த்தியம்.

ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால்
நன்றாக இருக்கும்.

சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர்
ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு
கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.

பாத்திரத்தில ஒட்டியகளியுடன் தண்ணீர் 
ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் 
செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு 
பாருங்க.அதன் ருசியே தனி. 

தொட்டுக் கொள்ள :
 கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , 
கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என 
எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல 
கூட்டணிதான்.

 குறிப்பு : 

1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான 
பாத்திரம்) வகையாக இருந்தால் 
கிளறுதல் எளிது

 2.) களி கிண்ட தட்டையான நீளமான 
மர கரண்டி கடையில் கிடைக்கும் 
இல்லாவிட்டால் தோசை திருப்பியை 
உபயோகிக்கலாம். 

 3.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / 
சோள / கோதுமை மா சேர்த்தும் 
களி கிண்டலாம். 

4) மா கட்டி கட்டாமல் கிளற 
தெரியாதென்றால் , மா போட்டு 
கிளறும் முன் கொஞ்சம் பழைய 
சாதம் அல்லது சம்பா ரவையை
 சேர்த்துக் கொள்ளலாம் 

கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.) 6.) சர்க்கரை உள்ளவர்க

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.