கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 9. April 2014

ரிப்பன் பகோடா

தேவையான பொருள்கள்

கடலை மா- 3 கப்
அரிசி மா - 1 கப்
மிளகாய் தூள் - தேவையானளவு
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மா - சிட்டிகை அளவு
எணணெய் பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய்
ரிப்பன் அச்சு

செய்முறை

 கடலைமா அரிசி மா உப்பு, மிளகாய்த்தூள்,
 சோடாமா ஆகியவற்றை ஒன்றாக கலந்து
சலித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையான அளவு சூடானநீர் ஊற்றி முறுக்கு
மாபதத்திற்கு பிசையவும்.

அதனுடன் சூடான  எண்ணெய் விட்டு மேலும்
இலகுவாக பிசையவும்.

(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு
இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம்
 பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதன் பின்னர்  குழைத்து  வைத்திருக்கும்
மாமை ரிப்பன் அச்சில் இடவும்

 பின்னர் ஒரு தட்டில்அச்சில் உள்ள மாமை
 பிழிந்து ஓரளவு நீளத்தில் குறுக்காக
வெட்டவும்

அதன் பின்னர் எண்ணெய் சூடானதும்
 வெட்டிய துண்டுகளை  சூடான எண்ணெய்
யில் போட்டு  பொரிய விடவும்.

பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து
இன்னொருபாத்திரத்தில் போடவும்.

போட்டவற்றை ஆறவிடவும்

இப்போது சுத்தமான சுவையான சத்தான
ரிப்பன் பக்கோடா தயாராகிவிடும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.