கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 11. April 2014

இறால் உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி
கரட் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு – தேவையானளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய்- 6 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி


செய்முறை:

இறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். 

பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். 

ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். 

சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். 

வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.

ஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.