தேவையான பொருட்கள்
கடலை மா – 1 1 / 4 கப்
அரிசி மா – 1 / 4 கப்
மிளகாய்தூள் – 2 +1 /2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி (அல்லது)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வறுக்காத கச்சான்
(வேர்க்கடலை )கடலை மா அரிசி மா
மிளகாய்த்தூள் இஞ்சி விழுது
உள்ளி(பூண்டு) விழுது,உப்பு
ஆகியவற்றை போட்டு குழைக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்க விடவும்.
எண்ணெய் கொதித்த பின்னர்
பாத்திரத்தில் குழைத்து வைத்துள்ள
கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து
மீண்டும் குழைக்கவும்
குழைத்த பின்னர் எண்ணெய்யில்
போட்டு மிதமான தீயில் நன்றாக
வேகவிட்டு எடுக்கவும்.
அதன் பின்னர் அதனை எடுத்து
ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்னர் சுத்தமான சுவையான
சத்தான கச்சான்(வேர்கடலை) பகோடா
தயாராகிவிடும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.