கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 16. April 2014

உருளைக்கிழங்கு ரோல்

தேவையான பொருட்கள்

கோதுமை  மா – 1 கப்
மெல்லிய ரவை – 1/2 கப்
எண்ணெய் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மசாலா செய்வதற்கு
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பொடியாக நறுக்கியவெங்காயம்– 3 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியமல்லித்தழை  – 2 தேக்கரண்டி
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையானளவு

மைதா பசை செய்வதற்கு
தண்ணீர் – 2 பங்கு
மைதா – 3 பங்கு

செய்முறை 

 ஒரு பாத்திரத்தில் கோதுமை மா ரவை, 
எண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு 
கலந்து தேவையான அளவு தண்ணீர் 
சேர்த்து சப்பாத்தி மாபதத்திற்கு 
பிசைந்து கொண்டு ஈரத்துணி கொண்டு 
மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து 
தோலுரித்து நன்கு பிசைந்து இன்னொரு 
பாத்திரத்தில் பொட்டு வைக்கவும்.

அதன் பின்னர் இதனுடன் வெங்காயம், 
மல்லித்தழை, இஞ்சி,பச்சை மிளகாய் 
விழுது, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், 
மிளகாய்த்தூள், கறிமசாலாதூள், 
சிறிது உப்பு ஆகியவற்றை போட்டு  
நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

இக்கலவையை எலுமிச்சை அளவு 
உருண்டைகளாக உருட்டிய பிறகு 
நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.

பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய 
உருண்டைகள் செய்து சப்பாத்தி போல 
இடவும்.

தேய்த்த சப்பாத்தியின் ஒரு மூலையில் 
மசாலா உருட்டியதை வைத்துப் பாய் 
போல் சுருட்டவும்.

குழல் போல் சுருட்டியதும் ஓரங்களை 
உள்ளே மடித்து மைதா பசை கொண்டு 
ஒட்டவும். 

பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும்
 சரியாக ஒட்டவும்.

இதே போல மா முழுவதையும் செய்து 
கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி 
வைக்கவும்.

ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை 
மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்
னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மூன்று அல்லது நான்கு துண்டுகளாக 
வெட்டி தக்காளி சாஸ் உடன் 
பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.