கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 20. Mai 2014

மரக்கறி பிரியானி

தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 2கப் 
தண்ணீர் - 4கப் 
உப்பு . தேவையானளவு 
ஏலக்காய் - 6
கறுவாப்பட்டை -6
கிராம்பு -6 
பெருஞ்சீரகம் -2 தேக்கரண்டி 
பிரிஞ்சி இலை -2
பட்டர்- 2 மேசைக்கரண்டி 
நீளமாகவெட்டியகரட் -100கிராம் 
நீளமாகவெட்டியபீன்ஸ் -100கிராம் 
அவிந்த பட்டாணி -100கிராம் 
நீளமாகவெட்டியகோலிபிளவர் - அரைப்பூ 
நீளமாகவெட்டியகுடமிளகாய் - 2
நீளமாகவெட்டிய பெரிய வெங்காயம் - 2
சிறியதுண்டுகளாகவெட்டியதக்காளி- 10
எண்ணெய்-1மேசைக்கரண்டி 
தயிர் -2கப் 
மல்லித்தூள் -2தேக்கரண்டி 
கரம் மசாலத்தூள் -2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1தேக்கரண்டி
இஞ்சி -1 துண்டு 
உள்ளி -6 பல் 
பச்சைமிளகாய்-6
நறுக்கியகறிவேப்பிலை - தேவையானளவு 

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை 
போட்டு அதனுடன் தேவையானளவு 
தண்ணீர் விட்டு கழுவவும் .

கழுவியபின்னர்  அதனை அரை
மணித்தியாலம் ஊறவிடவும் 

அதன் பின்னர் அடுப்பில் ஒரு கனமான 
பாத்திரத்தை வைத்து சூடாக்கவும் 

பாத்திரம் சூடானதும் அதில் 1 
மேசைக்கரண்டி பட்டரை போட்டு 
உருக்கவும் 

பட்டர் உருகியதும்  அதில் பெருஞ்சீரகம் 
1 தேக்கரண்டி ,கறுவாப்பட்டை-4.கிராம்பு-4,
பிரிஞ்சி இலை,ஏலக்காய்-4 ஆகியவற்றை 
போட்டு தாளிக்கவும் .

அதன் பின்னர் ஊறிய அரிசியின் 
தண்ணீரை  நன்றாக வடிக்கவும் .

அதன் பின்னர் அதை தாளித்தவற்றுடன் 
போட்டு லேசாக வறுக்கவும் .

வறுத்த பின்னர் அதனுடன் 4 கப் தண்ணீர் ,
உப்பு ஆகியவற்றை போட்டு மூடி 
அவியவிடவும் .

அரிசி அவிந்து தண்ணீர் வற்றியதும் இப் 
பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி 
வேறு ஒரு இடத்தில் வைக்கவும் 

அடுப்பில் ஆவியில் வேகவைக்ககூடிய 
பாத்திரத்தை வைத்து அதில்  நீளமாக
வெட்டியகரட்,நீளமாகவெட்டிய
பீன்ஸ் ஆகியவற்றை போட்டு ஆவியில் 
வேகவிடவும் .

ஆவியில் வெந்ததும் அதனை எடுத்து 
வேறு ஒரு பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை 
வைத்து சூடாக்கவும் .

அதன்பின்னர் அதில் 1 மேசைக்கரண்டி 
பட்டரை போட்டு உருக்கவும் 

பட்டர் உருகியதும்  அதில் 1தேக்கரண்டி 
பெருஞ்சீரகத்தை போட்டு தாளிக்கவும் 

தாளித்தபின்னர் அதனுடன் வெங்காயம் 
தக்காளிப்பழம்-4  ஆகியவற்றை போட்டு 
அதனுடைய நிறம் மாற வதக்கவும் 

வதக்கியபின்னர் அதனுடன் கோலிபிளவர் 
குடமிளகாய் ஆகியவற்றை போட்டு ஓரளவு 
வதக்கவும் .

இவையாவும் வதங்கிய பின்னர் இதனுடன் 
ஆவியில் வெந்த கரட்,பீன்ஸ் உப்பு 
ஆகியவற்றை போட்டு காய்கறிகள் 
குழையாமல்  வேகவைக்கவும் 

அவையாவும் வேந்த பின்னர் அடுப்பில் 
இருந்து தாட்சியை இறக்கவும் 

இஞ்சி -1 துண்டு, உள்ளி -6 பல். பச்சை
மிளகாய்-6 ஆகியவற்றை பசையாக 
அரைக்கவும் 

இதில் இருந்து 1 மேசைக்கரண்டி 
அளவினை எடுத்து  தனியாக 
வைக்கவும் 

தயிரில் மல்லித்தூள்,கரம் மசாலத்தூள் 
மிளகாய்த்தூள் ,மஞ்சள் தூள் ஏலக்காய் - 2
கறுவாப்பட்டை -2கிராம்பு-2பசையாக 
அரைத்தவை (இஞ்சி ,உள்ளி பச்சை
மிளகாய்) சிறிய துண்டுகளாகவெட்டிய 
தக்காளி- 6,நறுக்கியகறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு கலந்து 1 
மணித்தியாலம் ஊறவிடவும் 

 1மணித்தியாலத்தின் பின்னர் அடுப்பில் 
வாய் அகன்ற பாத்திரத்தை  வைத்து அதில் 
வதக்கிய காய்கறிகள் ,ஊறிய தயிர்கலவை
ஆகியவற்றை சேர்த்து ஒரளவு சூட்டில் 
வைத்து கிளரவும் .

(காய்கறிகள் குழைந்து போகக்கூடாது )

மசாலாக்களில் உள்ள நீர் வற்றியதும் 
அடுப்பை அணைத்து பாத்திரத்தை 
அடுப்பில் இறந்து இறக்கவும் .

அதன் பின்னர் வாய் அகன்ற தட்டில் 
பிரியாணி சோற்றின்  ஒரு பகுதியை 
பரப்பி வைக்கவும் .

அதன் பின்னர் அதன் மேல் ஒரு பகுதி 
காய்கறி கலவையை பரப்பவும் .

அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும் .

அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும் 


அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும்.


அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும்.

அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும்.

அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும்.

இப்படி லேயர்லேயராக எல்லாவற்றையும் 
போடவும் .

போட்டபின்னர் இனி அத்தனை 
லேயரையும் மெதுமெதுவாக 
முள்ளுக்கரண்டியால் கிளறவும் 

தம் செய்யும் விதம் 

கனமான அடியுள்ள சிறிதளவு 
நெய் தடவிய பாத்திரத்தில்
கிளறிய பிரியாணியை  போடவும்.

அதன் பின்னர் அதனை குறைந்தளவு  
நெருப்புள்ள அடுப்பில் வைத்து 
அப்பாத்திரத்தை மூடவும் .

மூடிய பின்னர் 5நிமிடம் விடவும் .

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் இருந்து மூடியை திறந்து 
பரிமாறவும் .

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.