கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 3. Oktober 2010

மைசூர்பாகு

இனிப்பு பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும் இதில் மாச்சத்து , இலிப்பிட்டு,கொழுப்பு சத்து போன்ற பல சத்துகள் அடங்கியது அத்துடன் மிக மிக சுவையானதும் ஆகும்


தேவையான பொருட்கள்

கடலை மா - 1 / 2 சுண்டு 
சீனி (சக்கரை ) -1 சுண்டு 
நெய் - 150 கிராம் 
தண்ணீர் - 1 /2 கப் 

செய்முறை
  1. அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் சீனி (சக்கரை) ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு காச்சவும்.
  2. சீனி (சக்கரை )மெல்லிய கம்பி பதமாக வரும் வரை நன்றாக காச்சவும்.
  3. அதன் பின்பு இதனுடன் கடலை மாவை சிறிது சிறிதாக தூவி நன்றாக கலந்து கட்டிபடாமல் கிளறவும்.
  4. முழுவதும் நன்றாக கலந்த பின்பு நெய்யை இடையிடையே சேர்த்து கிளறவும்.
  5. அதன் பின்பு இக்கலவை தாட்சியில் (வாணலியில் ) ஒட்டாமல் திரளும் பதத்தில்வரும் போது இக்கலவை உள்ள தாட்சியை (வாணலியை ) இறக்கவும்.
  6. பின்பு இறக்கிய தாட்சியில் (வாணலியில் )உள்ள கலவையை நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி பரப்பவும் .
  7. அழுத்தி பரப்பிய பின்பு சூடாக இருக்கும் போது தேவையான அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.