இனிப்பு பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும் இதில் மாச்சத்து , இலிப்பிட்டு,கொழுப்பு சத்து போன்ற பல சத்துகள் அடங்கியது அத்துடன் மிக மிக சுவையானதும் ஆகும்
தேவையான பொருட்கள்
கடலை மா - 1 / 2 சுண்டு
சீனி (சக்கரை ) -1 சுண்டு
நெய் - 150 கிராம்
தண்ணீர் - 1 /2 கப்
செய்முறை
- அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் சீனி (சக்கரை) ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு காச்சவும்.
- சீனி (சக்கரை )மெல்லிய கம்பி பதமாக வரும் வரை நன்றாக காச்சவும்.
- அதன் பின்பு இதனுடன் கடலை மாவை சிறிது சிறிதாக தூவி நன்றாக கலந்து கட்டிபடாமல் கிளறவும்.
- முழுவதும் நன்றாக கலந்த பின்பு நெய்யை இடையிடையே சேர்த்து கிளறவும்.
- அதன் பின்பு இக்கலவை தாட்சியில் (வாணலியில் ) ஒட்டாமல் திரளும் பதத்தில்வரும் போது இக்கலவை உள்ள தாட்சியை (வாணலியை ) இறக்கவும்.
- பின்பு இறக்கிய தாட்சியில் (வாணலியில் )உள்ள கலவையை நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி பரப்பவும் .
- அழுத்தி பரப்பிய பின்பு சூடாக இருக்கும் போது தேவையான அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.