கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 19. August 2012

கச்சான் (வேர்க்கடலை) சப்பாத்தி

தேவையான பொருட்கள்
கச்சான் (வேர்க்கடலை )– 1/4கப்,
கோதுமை மா – 1கப்,
பால்-1மேசைக்கரண்டி
பட்டர்-1-2 தேக்கரண்டி
முட்டை -1(விரும்பினாள்)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
சின்ன வெங்காயம், – 4,
செத்த மிளகாய் – 4,
சிறிய மாங்காய் துண்டு – 1,
உப்பு -தேவையானளவு.
எண்ணெய் – தேவையானளவு. 

 செய்முறை: 
மிக்ஸியில் கச்சான் (வேர்க்கடலை )
வெங்காயம், செத்த மிளகாய், மாங்காய்
துண்டு, இஞ்சி, உப்பு ஆகியவற்றை
போட்டு கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தில்
கோதுமை மாவை போட்டு அதனுடன்
அரைத்தவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

நன்றாக கலந்த பின்னர் அதனுடன்
பட்டர் ,பால் , முட்டை ,தண்ணீர்
ஆகியவற்றை போட்டு நன்றாக
குழைக்கவும்

 குழைத்த மாவை சிறு சிறு உருண்டை
 களாக உருட்டவும்.

சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து
 வட்டமாக தட்டவும் .

வட்டமாக தட்டியபின்னர் அடுப்பில்
தோசைக்கல் வைத்து அது சூடானதும்
கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

எண்ணெய் தடவிய பின்னர் வட்டமாக
தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்

அது வெந்ததும் அதனை மறுபக்கம்
திருப்பி போட்டு வேகவிடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான,
மென்மையான சுத்தமான சத்தான
வேர்க்கடலை சப்பாத்தி தயாராகிவிடும் .

இதனைப்போல மற்றைய சப்பாத்தி
 ளையும் தயார் செய்யவும்.

அதன்பின்னர் ஒருதட்டில் சுத்தமான
சுவையான சத்தான வேர்க்கடலை
சப்பாத்திகளில் சிலவற்றை வைத்து 
அதனுடன் குழம்பு.சம்பல்.ஜாம் 
இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து 
பரிமாறவும் .

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.