தேவையான பொருட்கள்
கடலை மா– 3 கப்
அரிசி மா– 1 கப்
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி
உப்பு- தேவையனளவு
அப்பச்சோடா– சிட்டிகை அளவு
எண்ணெய்- தேவையானளவு
முறுக்குக் குழாய்,
ரிப்பன் அச்சு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமா, அரிசி மா,
உப்பு, மிளகாய்த்தூள்,அப்பசோடா ஆகிய
வற்றை ஒன்றாக கலந்து அரித்து வைக்கவும்.
அதன்பின்னர் அதில்தேவையானளவு கொதிநீர்
ஊற்றி முறுக்கு மா பதத்திற்கு பிசையவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய்
ஊற்றி சூடாக்கவும்
மேலும் மாவை இலகுவாக பிசையவும்.
(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு
இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம்
பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)
எண்ணெய் சூடானதும் முறுக்கு பிழியும்
குழாயில் ரிப்பன்அச்சை போடவும்
அதன் பின்னர் அதில் குழைத்து வைத்திருக்கும்
மாவை போடவும்
அதன் பின்னர் அதனை எண்ணெய்யில் பிழிந்து
பொரிக்கவும்.
அதனை செம்பொன்னிறமாக பொரிக்கவும்
பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
ஓலைப்பகோடா தயாராகிவிடும்
அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு சூடு ஆறவிடவும்
பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு ஓலைப்ப
கோடாவை வைத்துப்பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.