தேவையானவை:
இட்லி மா– 2 கப்,
நறுக்கிய வெங்காயம்-1
குடமிளகாய் -1
தக்காளி –1
பச்சை மிளகாய் – 2
சீஸ் துருவல் – 2 மேசைகரண்டி
தக்காளி கெட்சப் – ஒரு மேசைகரண்டி
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)– 2 பல்,
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய்– தேவையானளவு
உப்பு – தேவையானளவு.
செய்முறை
தாட்சியில் வெண்ணெய் விட்டு நறுக்கிய
உள்ளி(பூண்டு), வெங்காயம், குடமிளகாய்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி
தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல்
சேர்த்து இறக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய்
தேய்த்து, சற்று தடிமனாக மாவை
வார்த்து மூடி வைத்து, அடுப்பை
மிதமான தீயில் வைக்கவும்.
பிறகு, மூடியைத் திறந்து.. தோசை
மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய
காய்கறியைப் பரப்பி, கடைசியாக
வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல்
ஆகியவற்றைத் தூவி, வாசனை
வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.