கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 4. Juni 2014

பலாக்கொட்டை உள்ளி மசாலா

தேவையானவை:
பலாக்கொட்டை – 10 – 15
வெள்ளை உள்ளி  – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
சாம்பார் பொடி – 1 +1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
தக்காளி – ஒன்று

தாளிக்க
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு
சீரகம்
உளுந்து
கடலைபருப்பு
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் உள்ளியை 
தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி 
வைக்கவும்.

பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி 
உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு 
சூடானதும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து
கடலைபருப்பு  ஆகியவற்றை போட்டு 
தாளிக்கவும்.;

அதன் பின்னர் அதில் செத்தல் மிளகாய்
கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், 
உள்ளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பொடியாக 
நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு 
சேர்த்து குழைய வதக்கவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி,
 தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
பச்சை வாசம் போக மசாலா திரண்டு 
வரும் வரை பிரட்டவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, 
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
பச்சை வாசம் போக மசாலா திரண்டு 
வரும் வரை பிரட்டவும்.

.சுவையான பலாக்கொட்டை உள்ளி 
 மசாலா தயார். 

சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் 
பக்க உணவாக பரிமாறவும் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.